பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Thursday, 25 February 2016

மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' கட்ட அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 'இல்லம்' கட்ட இடம் தேர்வு

கல்வித்துறையில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உட்பட பல பிரிவுகளின் கீழ் ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு அடிக்கடி பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.


மேலும் உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் உள்ளதால் வழக்குகள் தொடர்பாக இயக்குனர், இணை இயக்குனர்கள் உட்பட அதிகாரிகளும், 13 மாவட்ட கல்வி அதிகாரிகளும் அடிக்கடி இங்கு வருகின்றனர். அவர்கள் தனியார் ஓட்டல்களில் தான் தங்குகின்றனர்.மேலும், தலைமையாசிரியர்கள் கூட்டம், பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் முகாம்கள் பெரும்பாலும் தனியார் அல்லது உதவிபெறும் பள்ளிகளில் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய்வது கல்வி அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது.


இப்பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கு தீர்வாக புதிதாக ஆசிரியர் இல்லம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.இதன் விளைவாக முதல்வர் ஜெயலலிதா சட்டபையில் 110 விதியின் கீழ் 'மதுரை மற்றும் கோவைக்கு ஆசிரியர் இல்லங்கள் (டீச்சர்ஸ் ஹோம்) தலா ரூ.3 கோடியில் கட்டப்படும்,' என அறிவித்தார்.


இதன்படி இரண்டு மாவட்டங்களுக்கும் நேஷனல் டீச்சர்ஸ் நிதியில் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

ஆசிரியர் இல்லம்  ஒத்தக்கடையில் கட்டப்படவுள்ள இடத்தை மாவட்ட வருவாய்அலுவலர் வேலுச்சாமி முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆய்வு செய்தனர்