பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Monday, 2 November 2015

மதுரை கள்ளர் சீரமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவுகள்.

இன்று காலை 11 மணியளவில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் பேச்சு வார்த்தை அழைத்ததின் பேரில்  நமது தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் திரு இரா.பிரபாகரன் , மதுரை மாவட்டத் தலைவர்  திரு,பெ.சரவணமுருகன்,  மாநில துணைத்தலைவர் திரு. சிவ.ராஜேந்திரன், மற்றும் திரு. ச. சுதாகர், திரு. க.வெங்கடேசன்,  திரு. கோ. வீரசத்திய ராமசாமி, திருமதி. சி.சரண்யா பேபி அவர்களும் கலந்து கொண்டனர் 
நடைபெற்ற பேச்சு வார்த்தை கூட்டத்தில் துறைமாறுதலுக்கு நிரந்தர அரசாணை வெளியிட உரிய கருத்துருக்ளை விரைவில் அனுப்பி உரிய நிரந்தர அரசாணை பெறப்படும்,என்பது உட்பட  7 கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என இணை இயக்குனர் உறுதியளித்ததின் பேரில் 04.11.2015 (புதன்கிழமை) அன்று மாலை 5 மணி அளவில் மதுரை, ஜெயம் திரையரங்கம் முன்பாக நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது 
கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது