பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Sunday, 8 March 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கையின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில்   மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் 10 மணி அளவில் தொடங்கி காந்தி மியூசியத்தில் முடிவடைந்தது பேரணியில் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
*ஆசிரியர்கள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தன்பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
*கடந்த, 1986-88ம் ஆண்டுஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், 2004 -06ம் ஆண்டு வரை, தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல், பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
*தொழிற்கல்வி ஆசிரியருக்கு, 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 30 ஆண்டாக எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருக்கும் ஆசிரியருக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவதுபோல, ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
*உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று என்ற பதவியை உருவாக்க வேண்டும்.
*ஒவ்வொரு பதவி உயர்வுக்கும், ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். *பள்ளிகளில் சமீபகாலமாக, விரும்பத்தகாத சம்பவங்கள், ஆசிரியருக்கு எதிராக நடக்கிறது. எனவே, மருத்துவருக்கு பணியில் பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல், ஆசிரியருக்கும் பணி பாதுகாப்பு சட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.